காமராசர்
காமராசராக இருந்தும் கன்னியின் வாசம் அறியாதவரே!
பலரின் கண்ணீரை துடைத்தவரே!
கடவுளை விட சிறந்த கல்வியின் கண்ணை திறந்தவரே!
கல்வி கற்காத கர்ம வீரரே!
பேச்சாற்றலால் சுதந்திரத்தினை மனதில் மின்சாரமாக்கியவரே!
மின்சாரத்தால் குக்கிராமத்தினையும் மிளிரச்செய்தவரே!
கட்டாயக் கல்வியை அறிமுகப்படுத்தி புரட்சிக்கு வித்திட்டவரே!
மதிய உணவும் ஊட்டிய தாயானவரே!
வைகையில் கை வைத்து வளமான மண்ணாக மாற்றியவரே!
சாத்தநூரையும் சத்துள்ளதாக உருவாக்கியவரே!
பதவி ஆசை கடுகும் இல்லா பெருந்தன்மை தலைவரே!
வாடகை வீட்டிலேயே வசித்தவரே!
இரு இந்திய பிரதமர்களை உருவாக்கிய முதலமைச்சரே!
பலரின் உள்ளத்திலும் அமர்ந்தவரே!
ஆறு வரை படித்து, பத்து வரை இலவச கல்வி அளித்தவரே!
பல்கலைகழகத்தின் பெயரையே மாற்ற வைத்தவரே!
விசித்திரமானவரே!
உங்கள் மணத்தினை ஏற்றுள்ள எங்கள் மனம்,
என்றும் வாடா மலராய் மணம் வீசும்...
No comments:
Post a Comment