KarSho கவிதைகள்
Thursday, 25 April 2013
Monday, 3 December 2012
Monday, 19 November 2012
Friday, 9 November 2012
Monday, 5 November 2012
Thursday, 25 October 2012
30 - காதல் - LOVE
என் ஏழு ஜென்ம காதலும் உன்னோடு
விட்டு வைக்காது என்னை உயிரோடு
தேக்கி வைத்ததை இறக்க வேண்டும்
உன் தேகம் முழுக்க நிரப்ப வேண்டும்
என் மோட்சம் முற்றி போகும்!
நீ கடை கண்ணில் கண்டால்,
என் கற்பு கலங்கி போகும்!
உன் ஒவ்வொரு சொல்லுக்கும் என் செல்கள் வெடிக்குமே!
செல்கள் வெடித்து செயலை கெடுக்குமே!
காற்று கரை கடந்து என் நெஞ்சை முட்டுமே!
நெஞ்சில் நம் நினைவுகள் நுரைக்குமே!
Monday, 22 October 2012
28 - வேண்டும் வரதட்சணை - Dowry should be
மாமியாருக்கு தட்சணை:
நீ தருவது,
என் கருவறையின் 10 மாதக் கூலியம்மா!!!
என் பாலின் விலையம்மா!!!
என் எதிர் கால இன்சூரன்ஸம்மா!!!
நீ,
வரதட்சணை தந்தால் நான் தருவது,
வரன்தட்சணையம்மா!!!
கணவருக்கு தட்சணை:
நீ தருவது,
என் மூன்று முடிச்சின் சம்பளமடி!!!
என் வாழ்வில் ஏணியடி!!!
அது தான் என் மதிப்படி!!!
நீ,
வரதட்சணை தந்தால் நான் தருவது,
சேயடி!!!
மனைவிக்கும் தட்சணை:
மணப்பெண்ணிடம்
பணம் வாங்கும் - நீங்கள் என்ன
பிணங்களா?
இல்லை,
ஒரு நாள் பரம்பரை பிச்சைக்காரர்களா?
பாசத்திற்கும் நேசத்திற்கும்
விலை பேசும் வியாபாரிகளா?
இல்லை,
பொய் அன்பை தரும் விபச்சாரிகளா?
வரதட்சணை வாங்கும் மூடர்களே!
கேளுங்களேன் வாரதட்சணை!
20 வருடம் காப்பாற்றிய
கற்பினை
காலமாக்கி
ஓர் வருடம் (இ)கஷ்டப்பட்டு
கருவை
உருவாக்கி
வாழும் காலம் வரை
கரங்களாய்
கண்களாய்
கடவுளாய் இருக்கும்
என்னிடமா தட்சணை ???
அம்மி மிதித்த என்னிடம்
இம்மியளவு புன்னகை எதிர்பாராமல்
பொன்நகை எதிர்பார்ப்பவனே!!!
அருந்ததியை மட்டும் நிமிர்ந்து பார்த்து
வேறுகதி இல்லையென வரும் எனக்கு
சதி செய்யும் வெட்டியானே!!!
என் கணவன் பதவிக்கு உன்னை அமர்த்த
நான் வரதட்சணை தரவேண்டும் என்றால்,
நான் பார்க்க போகும்,
மனைவி
மருமகள்
தாய்
வேலைகளுக்கு
வரவரவரதட்சணை
தரவேண்டுமடா!!!
என் மன்னனே!!!
Saturday, 20 October 2012
27 - பித்தளையாகட்டும் பிளாட்டினம் - Confidence
எழுந்து வாடா தோழா!!!
ஏட்டு சுரக்காய் வேண்டாம்...
புத்தியை முதலில் திற!
புத்தகத்தை பிறகு திற!
கலை கற்றது போதும்,
களை பிடுங்கலாம் வா...
எண்ணெயில் வெண்ணெய் எடுக்கலாம்!
வெண்ணிலவில் தேனிலவு வைக்கலாம்!
சூரியனுக்கு வேர்க்கிறதாம்,
தீயணைப்பு படையனுப்பு!!!
- வழியில்
சந்திரனுக்கு குளிருதாம்,
தீக்குச்சி சேர்த்தனுப்பு!!!
புயலுக்கு பதில் பூவும்
பூவுக்கு பதில் புயலும்
வை!
வழியட்டும் வைரம்.....
பித்தளையாகட்டும் பிளாட்டினம்......
25 - போராளி - Warrior
வாழ்நாள் முழுவதும்
வாழ்நாள் முடியும் வரை
"போராளி"
அடையமுடியா
இலக்கை நோக்கி
- ஈசள் -
நம்பிக்கையுடன்
வாழும்
ஓர் நாளும்
24 - நட்பு - Friendship
கண்ணாடி
என் முன்னாடி
என்றும் உடையாதது
உடைத்தாலும் பலபிம்பம்
சிரித்தால் சிரிக்கும்
அடித்தால் பொறுக்கும்
யாவருக்கும் இருக்கும்
இல்லாமல் முடியாது
முடிந்தால் இருக்காது
உண்மையெனில் உயிரானது
இல்லையெனில் உடலானது
கடலும் அலையும்
காற்றும் பாயும்
இடையில் ஒருவன்
சேர்த்து அணைக்கும்
துன்பத்தில் சமயத்தில்
சுற்றம் சுருண்டாலும்
உறவு உடைந்தாலும்
நாடி வரும்
நட்பு...
22 - மழையில் கனவு - Dream in the rain
" டிசம்பர் மாதத்து இலையுதிர் காலம்
9am -ல் சென்றேன் நைல் நதியோரம்
திடிரென தாக்கியது ஒரு மின்னல்
பயந்தேன் பின் பார்த்தேன் பின் ரசித்தேன்
அது மின்னல் கோடி சேர்ந்த ஒரு கொடியென
அப்போது கதிரவன் மறைந்திருந்து டார்ச் அடிக்க
உனக்கு கண் கூசும் என் பின்னால் ஒளி என்றேன்
ஓடி ஒளிய, ஆனது 9pm
தெரிந்தது அழகு
அதனை மூடியது பனி
அதன் பணி போல்
அவ்வசந்தம் என் அருகில் வர என்னில் வெடித்தது
அணு உலை
அப்போதும் ஓர் இன்னிசை மெல்லிசையாய்
அது மூச்சு
அருகில் இடியும் வந்து முழங்க
அது பேச்சு "
அதில் இதை அவள் சொன்னாள்
பின்
இதயத்தை இடமாற்ற
மயங்கி கண் மூடி தேனில் நனைந்தேன்
திடிரென கண் திறந்தேன்
அது என் Dream-ல்
நனைந்தது மழையில்...
Thursday, 18 October 2012
Wednesday, 17 October 2012
18 - முடிந்ததுக் கதை 1 - அரசியல்
அரசியல்
அன்பான
ஆக்கபூர்வமான
அக்கால அரியணைக்கு
நிகராக - இக்கால
அரசியலா???
ஐந்தாண்டு ஆட்சியோ
முடியப்போகும் நேரம்
அடுத்தக் கட்டம்
மலையேறிக் கொண்டிருந்தது
எதிர்க்கட்சியோ
ஐந்தாண்டு அமரா
ஆத்திரத்தினை, ஒலிப்பெருக்கியால்
ஆற்றிக் கொண்டிருந்தது
மக்களோ
எவனோ மிட்டாய் கடையை
முறைத்தது போல்
குறைப்பதை
பார்த்துக் கொண்டு
மட்டும் இருந்தனர்
அவர்கள் கட்சினரோ
வரவு முன் செலவு
என எண்ணி
தண்ணியாய்
செலவு செய்தனர்
தண்ணீர் கிடைக்காத
இவ்வாட்சியை விட
தண்ணீ தரும்
இவர்கள் மேல்
எண்ணினர் குடிமக்கள்
பக்க பலத்திற்கு
மத்திய ஆட்சி வர
கூட்டத்தில் மக்கள்
பிரியாணியை
எதிர்பார்த்திருந்தனர்
ஆளுங்கட்சியோ
இப்போது விளைச்சல்
அமோகமாக இருப்பதால்
அடுத்த குத்தகையை
கைப்பற்ற எண்ணினர்
அவர்கள் கட்சினரோ
ஐந்தாண்டு அமுக்கியதில்
சில்லறைகளை
தலைக்கு 1௦௦௦
இறைத்துக் கொண்டிருந்தனர்
ஐய்யய்யோ...
என் வீட்டில் வெறும்
9 பேர் தான்
மக்கள்தொகை பெருக்கும் சங்கம்
பக்க பலத்திற்கு
மத்திய எதிக்கட்சி வர
கூட்டத்தில் மக்களோ
கூட்டமாய் வேறு
கூட்டணி அமைத்தனர்
இருக்கட்சினர்களும்
கோலிவுட்டை
குளத்தில் இறக்க
அவர்களும் ஆழம் தெரியாமல்
அவமானப்பட்டனர்
தொலைக்காட்சியில்
இவர்கள் தொல்லை
என வெளியே வந்தால்
அங்கேயும் தொல்லை
மேடை போட்டிருந்தது
குழந்தைக்கு பலகை
வாங்கி தரா மூடர்கள்
கட்-அவுட் பலகையை
கட்டிக் கொண்டிருந்தனர்
சீரியல் லைட்டுக்கு
மின்சாரம் போக
சிரித்துக் கொண்டிருந்தது
வீட்டு மின்சாரம்
புதிய
சலுகைகளும் இலவசங்களும்
பிறந்ததை
கொண்டாடினர்
அரசு ஊழியர்கள்
பொய்களும் வண்டிக்
கட்டிக் கொண்டு
வலப்பக்கம் ஒரு பொய்
இடப்பக்கம் ஒரு பொய்
என மாறி மாறி
மாரி பொழிந்தது
தேர்தலோ
மும்மூரமாய் வர
கள்ள ஓட்டுகளும்
நல்ல ஓட்டுடன்
ஒட்டி பிறந்தது
வாக்கு எண்ணிக்கையில்
நாடு நடுங்கிக் கொண்டிருந்தது
இருக்கட்சிகளும்
கூட்டணிக் கட்சிகளை
எதிர்ப்பார்க்க
கூட்டணி தலைவர்களோ
தரசு வைத்திருந்தனர்
ஏதோ ஒரு கட்சி
ஆட்சிக்கு வர
சாட்சி இல்லாமல்
மீண்டும்
-> முடிந்ததுக் கதை
17 - காமராசர் - Kamaraj
காமராசர்
காமராசராக இருந்தும் கன்னியின் வாசம் அறியாதவரே!
பலரின் கண்ணீரை துடைத்தவரே!
கடவுளை விட சிறந்த கல்வியின் கண்ணை திறந்தவரே!
கல்வி கற்காத கர்ம வீரரே!
பேச்சாற்றலால் சுதந்திரத்தினை மனதில் மின்சாரமாக்கியவரே!
மின்சாரத்தால் குக்கிராமத்தினையும் மிளிரச்செய்தவரே!
கட்டாயக் கல்வியை அறிமுகப்படுத்தி புரட்சிக்கு வித்திட்டவரே!
மதிய உணவும் ஊட்டிய தாயானவரே!
வைகையில் கை வைத்து வளமான மண்ணாக மாற்றியவரே!
சாத்தநூரையும் சத்துள்ளதாக உருவாக்கியவரே!
பதவி ஆசை கடுகும் இல்லா பெருந்தன்மை தலைவரே!
வாடகை வீட்டிலேயே வசித்தவரே!
இரு இந்திய பிரதமர்களை உருவாக்கிய முதலமைச்சரே!
பலரின் உள்ளத்திலும் அமர்ந்தவரே!
ஆறு வரை படித்து, பத்து வரை இலவச கல்வி அளித்தவரே!
பல்கலைகழகத்தின் பெயரையே மாற்ற வைத்தவரே!
விசித்திரமானவரே!
உங்கள் மணத்தினை ஏற்றுள்ள எங்கள் மனம்,
என்றும் வாடா மலராய் மணம் வீசும்...
15 - முத்தமிட்டால் தித்திக்கும்
தாய்க்கு சேயை
நிலவுக்கு இரவை
மழைக்கு பூமியை
மைக்கு காகிதத்தை
கவிக்கு கவிதையை
கற்பிற்கு கண்ணகியை
காற்றுக்கு புல்லாங்குழலை
வண்ணத்திற்கு வானவில்லை
எனக்கு கண்ணாடியை
முத்தத்திற்கு...
உன்னை
Tuesday, 16 October 2012
12 - நீயும் மலரடி - Paronomasia
மணம் உமிழும்
உன் மனத்தில்
என் சிள்வண்டு
மனத்தை
சிறை வைக்க
சிரிப்பு நிறத்தினை
சிதறச் செய்வாயோ!!!
''நீயும் மலரடி''
Monday, 15 October 2012
11 - கடல் - Sea
கடல்
வானத்தின் ஊமை பார்வைக்கு
வளைந்து ஆடுகிறாய்!
கங்காருவின் கருவறைக்கும் மேலாக
கர்பத்தை உற்றிருக்கிறாய்!
அழுது வற்றும் முகிலுக்கு
ஆறுதல் ஊற்றுகிறாய்!
உப்பிட்ட மண்ணை மறவாமல்
வற்றாமல் வளருகிறாய்!
கொடிய மிருகங்களிடமிருந்து எல்லையாய்
கடிவாளம் போடுகிறாய்!
வாடும் விலங்குகளுக்கு வாழ்விடமாய்
தெய்வம் ஆகுகிறாய்!
நாட்டின் நரம்பான நதிகளுக்கு
இடுகாடு ஆகுகிறாய்!
கதவு இல்லா கஞானாவை
நாட்டில் விரித்திருக்கிறாய்!
இவற்றிற்கு சிலசமயம் லாபம்பெற
சுனாமியால் சுருட்டுகிறாய்!
நீல நிற ஆடையற்ற தேவதையே - நீ
அழகானவளோ???
ஆபத்தானவளோ???
Friday, 12 October 2012
7 - நகைச்சுவை - Joke
அவள்
இமைக்கு பல்லாயிரம்,
இதழுக்கு பல்லாயிரம்,
இடைக்கு பல்லாயிரம்
என ரசிகர்கள்
வாடிக்கையாளர்கள்
'வேடிக்கை பொம்மை'க்கு
6 - தாஜ்மகால் - Taj Mahal
தாஜ்மகால்
அணுவணுவாய் அளந்தேன்
என் கண்களினால்
குழி வெட்ட என் மனத்தில்
உன்னை புதைக்க
நீ என்னை விட்டு சென்ற பின்
உன் மனம் கல்லறையாக இருக்கலாம்
-ஆனால்
என் மனம் தாஜ்மகால், என்றும்...
Thursday, 11 October 2012
5 - நட்பு - Friendship
நட்பு
ஆயிரம் பேர் வந்தாலும் - என்
அன்பை மறந்தாலும் - என்
ஆருயிர் பிரிந்தாலும் - என்
ஆட்டோகிராப் நினைவுப்படுத்தும் - என்னை
Wednesday, 10 October 2012
Tuesday, 9 October 2012
1
''நேற்று நீ என்னுடன்
இருந்திருந்தால்
இன்றை மறக்க செய்திருப்பேன்''
என்ற தலைவனிடம்,
''நேற்றை மறந்தாயா?''
என்றாள் தலைவி
Subscribe to:
Posts (Atom)





