Monday, 15 October 2012
11 - கடல் - Sea
கடல்
வானத்தின் ஊமை பார்வைக்கு
வளைந்து ஆடுகிறாய்!
கங்காருவின் கருவறைக்கும் மேலாக
கர்பத்தை உற்றிருக்கிறாய்!
அழுது வற்றும் முகிலுக்கு
ஆறுதல் ஊற்றுகிறாய்!
உப்பிட்ட மண்ணை மறவாமல்
வற்றாமல் வளருகிறாய்!
கொடிய மிருகங்களிடமிருந்து எல்லையாய்
கடிவாளம் போடுகிறாய்!
வாடும் விலங்குகளுக்கு வாழ்விடமாய்
தெய்வம் ஆகுகிறாய்!
நாட்டின் நரம்பான நதிகளுக்கு
இடுகாடு ஆகுகிறாய்!
கதவு இல்லா கஞானாவை
நாட்டில் விரித்திருக்கிறாய்!
இவற்றிற்கு சிலசமயம் லாபம்பெற
சுனாமியால் சுருட்டுகிறாய்!
நீல நிற ஆடையற்ற தேவதையே - நீ
அழகானவளோ???
ஆபத்தானவளோ???
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment